யாழில் 233 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்! மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் 233 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

சமூகம் மீடியாவுக்கு வழங்கிய பிரத்தியோக ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்று புதிய ஆண்டில் சத்தியப் பிரமாணத்துடன் கடமைகளை ஆரம்பித்துள்ளோம். மிகவும் வினைத்திறனுடைய சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் குறைவடைந்தாலும், அதன் அச்சம் இன்னமும் நீங்கவில்லை.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 18,975 பேர் இதுவரை கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 499 பேர் தொற்றால் உயிரிழந்தனர். மேலும், தற்போது 233 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *