தமிழரசுக் கட்சிக்குள்ளே இருப்பவர்கள் தங்களுடைய உறுப்பினர்களேயே நம்பாமல் அடிபடுகிறார்கள், இதில் மக்களுக்கு தேவையான அரசியல் தீர்வை எவ்வாறு பெற்றுக்கொடுப்பார்கள் என தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கெ சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் சிறீதரன், சம்பந்தன், சுமந்திரனை பார்த்து ஒன்று கேட்க விரும்பிகின்றேன். சுயநிர்ணயம், சுய ஆட்சி, அரசியல் தீர்வு என்று கதைத்துக்கொண்டு திரிகிறீர்கள். ஏன் பொது வாக்கெடுப்புக்கு தயக்கம் காட்டுகிறீர்கள்.
அரசுக்கு நோகக்கூடாது என்பதற்காக தமிழரசு கட்சியில் பலர் வேலை செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகின்றது.
மேற்குலகத்துக்கு ஒரு பேச்சு, மக்களுக்கு ஒரு பேச்சு, சிங்கள மக்களுக்கு ஒரு பேச்சு என இவர்கள் நாடகம் ஆடுகிறார்கள்.
பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் மாகாண சபைக்கு கிடைக்காது என்று திட்டவட்மாக சுமந்திரன் கூறுகின்றார்.
ஏன் ஏன்னென்றால் அவருக்கு எல்லாமே தெரியும். அரசு தரப்பில் பொதுசன வாக்கெடுப்பை நடத்துவோம், கூட்டு இணைப்பாட்சியை கேட்போம்.
ஆனால், ரெலோ கட்சி மேலே வந்துவிடுமோ, மலையக கட்சி மேலே வந்துவிடுமோ என்ற நோக்கில் புதுக் கதைகளை தமிழரசுக் கட்சி இப்போது கொண்டு வருகிறது.
கட்சியின் அரசியல் குழுவில் உள்ள சுமந்திரனின் அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட முக்கிய அறிக்கைகளை அவரின் கட்சியே நிராகரித்துள்ளது. இது தான் அவர்களின் நிலை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி தனியார் வைத்தியசாலைக்கு 70 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்று!