நாளை மறுதினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பேருந்து பயணக்கட்டணத்தை அதிகரிப்பதற்குக் கடந்த 29 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, பேருந்து பயண கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மற்றும் அனைத்து பொதுமக்களின் கவனத்திற்குத் தேசிய போக்குவரத்து சபையினால் இந்த விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.