தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.

இந்த வருடத்துக்கான தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதற்கமைய பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய் போன்ற பொருட்களும் சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றுடன் துணிப்பையும் வழங்கப்பட இருக்கின்றது.

இந்நிலையில் பொங்கல் தொகுப்பு பைகளை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆரம்பித்து வைக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *