டிக்டொக் வீடியோ தொடர்பாக ஏற்பட்ட தகராறு – கொழும்பில் 17 வயது சிறுவன் கொலை!

டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய லேன் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

டிக்டொக் காணொளியால் ஏற்பட்ட தகராறையடுத்து,  குறித்த சிறுவன் மேலும் இருவருடன் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு குழு அவரை தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இதன்போதே, சந்தேகநபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனவும் அதன்பின்னர், படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *