வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய இந்தியா திட்டம்!

வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய திட்டம் இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “ககன்யான் திட்டத்தின் முதல்படியாக நடப்பாண்டு முதல் ஆளில்லா பயண திட்டத்தை ஆரம்பிக்க இருக்கின்றோம்.

இதற்காக விகாஸ் இன்ஜின், கிரையோஜெனிக் ஸ்டேஜ், க்ரூ எஸ்கேப் சிஸ்டம் போன்றவற்றை சோதனை செய்யும் பணியில் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

மேலும், ககன்யான் திட்டத்தைத் தொடர்ந்து வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்யவும் திட்டம் இருக்கின்றது.

இதேவேளை ரஷ்யாவில் பொதுவான விண்வெளிப் பயிற்சியை இந்திய வீரர்கள் நிறைவு செய்துள்ளனர்.

அத்துடன் சூரியனுக்கான இந்திய விண்கலமான ஆதித்யா எல்1 முதற்கட்ட சோதனை முடிந்துள்ளது” என இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *