தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

கிழக்கு தாய்வானில் 6.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) மாலை 5:46 மணிக்கு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 20 வினாடிகள் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், பரவலான சேதம் அல்லது காயங்கள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்வானின் தீயணைப்பு சேவை, லிஃப்ட்களில் சிக்கிய ஒரு சிலரை மட்டும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். பெரிய அளவில் சொத்து சேதம் ஏதும் ஏற்படவில்லை

இந்த நிலநடுக்கம் தலைநகர் தைபேயில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடலோர நகரமான ஹூவாலினுக்கு கிழக்கே 64 கிலோமீட்டர் தொலைவில் கடலில் மையம் கொண்டிருந்தது.

கடந்த 2018ஆம் ஆண்டு இதே பகுதியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 17பேர் உயிரிழந்தனர். 300பேர் காயம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *