யாழ்ப்பாணம் வலிக்காமம் தெற்கு பிரதேச சபையின் அலுவலர் ஒருவர் நேற்று தாக்கப்பட்டமையை கண்டித்து அலுவலகம் முன்பாக இன்று காலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம், சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில்,வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை, வீதியின் ஓரத்திலிருந்து கடையின் பொருட்களை உள்ளே கொண்டு செல்லுமாறும், அப்புறப் படுத்துமாறும் சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் போது வியாபாரத்தில் ஈடுபட்ட நபர், அலுவலர்களை தள்ளி விட்டு தாக்க முற்பட்டதாக, பாதிக்கப்பட்டர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் சபை செயலர் ஊடாக பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரச அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும், முறைபாட்டுக்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும் போராட்டம் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.