கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கபட்டுள்ளது.
கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென குறிப்பிட்டு, A9 வீதியை மரித்து பெருந்திரளானவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்தில் கொல்லப்பட்ட நபரின் இறுதி கிரிகை இன்று முன்னெடுக்கப்பட உள்ள நிலையில், அவரது உடலை வீதியில் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டம் காரணமாக A9 வீதியின் பரந்தன் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.