நாட்டை காப்பாற்றுவதே தமது பொறுப்பு! நாம் தயார் என்கிறது சுதந்திரக் கட்சி

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை காப்பாற்றுவதே தமது பொறுப்பு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதனை கூறினார்.

தமது கட்சி பல வருடங்களாக மக்களுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றியுள்ள காரணத்தினாலேயே மக்கள் தம்மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே சரியான தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் சுதந்திரக் கட்சி தொடர்ந்து பணியாற்றும் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *