முற்று முழுதாக விவசாய அமைச்சு பிழையானது என்றேன்! பதவியிலிருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேம ஜயந்த

நேற்று முன் தினம் சந்தைக்குச் சென்ற போது பொதுமக்கள் பொருட்களின் விலை குறித்து கேட்டபோது முற்று முழுதாக விவசாய அமைச்சு பிழையானது என தெரிவித்தேன் என இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

இராஜாங்க கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு அமைச்சில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இராஜங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.

தன்னை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவது பெரிய விடயம் அல்ல.

எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவை அவ்வளவு பெரிய விடயங்கள் இல்லை. ஜனாதிபதிக்கு என்னை பதவியிலிருந்து நீக்க உரிமை உள்ளது.

2000ஆம் ஆண்டு நான் அமைச்சரானேன்.மூன்று ஜனாதிபதிகளின் கீழ் பணியாற்றியுள்ளேன் என்றும் எனக்கு தொழில் இருக்கிறது.

அதுதான் சட்டத்தரணி தொழில். நாளை முதல் அந்தத் தொழிலில் ஈடுபடப் போகிறேன் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *