புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் 50 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் அடுத்துவரும் ஒரு வாரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.