புதிதாக நாணயங்களை அச்சிடாமல் சலுகைகளை வழங்க வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

<!–

புதிதாக நாணயங்களை அச்சிடாமல் சலுகைகளை வழங்க வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

பொதுமக்களுக்கு நியாயமான சலுகைகளை வழங்குவது அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் புதிதாக நாணயங்களை அச்சிடாமல் இந்த சலுகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாக கூறினார்.

அவ்வாறு செய்யாவிட்டால் அதன் விளைவுகளை எம்மால் அனுபவிக்க முடியாது என்றும் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விசேட பொருளாதார நிவாரணப் பொதியொன்றை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *