சுற்றி நின்றோரை மெய் சிலிர்க்க வைத்த அதிபரின் செயல்!

தான் கல்வி கற்ற பாடசாலைக்கே அதிபராக தெரிவு செய்யப்பட்ட அதிபர், அந்த பாடசாலையின் கட்டட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கி அருகில் நின்றோரை மெய் சிலிர்க்க வைத்த சம்பவம் முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் பதிவாகியுள்ளது.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபராக திரு.சின்னப்பா நாகேந்திரராசா பொறுப்பேற்றுள்ளார்.

தான் கல்விகற்ற பாடசாலையைப் பொறுப்பேற்பதற்காக கற்றவர்கள் உற்றவர்கள் புடைசூழ வந்திருந்த அதிபர், பாடசாலையின் கட்டட வாயிலில் தலைதாழ்த்தி விழுந்து வணங்கியுள்ளார்.

இவர், தண்டுவான் அ.த.க.பாடசாலை, கற்சிலைமடு பண்டாரவன்னியன் ம.வி, முத்துஐயன்கட்டு வலதுகரை ம.வி போன்றவற்றின் அதிபராகவும் கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *