
சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக எழுந்துள்ள பல்வேறு ஒழுக்காற்று குற்றச்சாட்டுகள் காரணமாகவே அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை, அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பல ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை விமர்சித்ததற்காக அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஏனைய அமைச்சர்களின் முறைப்பாடுகளை அடுத்து ஜனாதிபதி, பிரேமஜயந்தவை பதவி நீக்கம் செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.