தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 18 ஆம் திகதி, இராமேசுவரம் மண்டபம் பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

அதேபோன்று புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களையும் குறித்த குற்றச்சாட்டுக்களுக்காகவே படகுகளுடன் அடுத்தடுத்த நாள்களில் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர்.

இதன்படி 68 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மன்னார் நீதிமன்றம், ராமேசுவரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன் 2 விசைப்படகுகளையும் திருப்பி வழங்குமாறு கடற்படைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *