
விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக கசிப்பினை புதுக்குடியிருப்பு நோக்கி எடுத்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று இரவு இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சந்தேக நபரிடமிருந்து 21 லீற்றர் கசிப்பினை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபரை தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து, தருமபுரம் பொலிஸார் சந்தேகநபரை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!