மத்திய வங்கியின் ஆளுநரின் ட்விட்டர் பதிவு!

வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள வெளிநாட்டு பணத்தை வேறு நாணயமாக மாற்றுவது தொடர்பில் மத்திய வங்கியினால் வணிக வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கூற்றுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தை சிரமத்திற்குள்ளாக்கும் நோக்கில் சில தரப்பினர் திட்டமிட்ட வகையில் இவ்வாறான வதந்திகளை பரப்புவதாக ஆளுநர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *