மறுசீரமைக்கப்படுகின்றது அமைச்சரவை – புதிய எவருக்கும் அமைச்சுப் பதவிகள் இல்லை எனவும் தகவல்!

அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய அமைச்சரவையில் 60 வீதமான மாற்றங்கள் இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளதுடன், புதிதாக எவரும் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படமாட்டார்கள் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன், சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *