
இலங்கை வங்கியினால் மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்ட வங்கி கிளை இன்றைய தினம் வியாழக்கிழமை (06) காலை 11 மணியளவில் புதிய கட்டிடத்தில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியின் வடமாகாண உதவி பொது முகாமையாளர் திரு.சிவானந்தன் மற்றும் மன்னார் மாவட்ட அரச அதிபர் நந்தினி ஸ்ரான்லி டிமேல் கலந்து கொண்டு வங்கி கிளையை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சர்வமத தலைவர்கள், இலங்கை வங்கியின் மாகாண செயற்பாட்டு முகாமையாளர் ஆனந்தராஜா இலங்கை வங்கியின் வன்னி பிரதேச முகாமையாளர் பரதன் மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர்,கணக்காளர்,உள்ளக கணக்காளர்,இலங்கை வங்கியின் மன்னார் கிளை முகாமையாளர் மற்றும் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை அலுவலகத்தின் முகாமையாளர்கள் வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மாவட்ட செயலக கட்டிடத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் கச்சேரி கிளை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வங்கி நடவடிக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பித்து வைக்கப்பட்ட தோடு,வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.