
திருகோமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் திருமணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று வியாழக்கிழமை (06) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது மக்களுக்கு நல்ல பல தகவல்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தின் ஊடகத்துறை செயற்பாட்டை விஸ்தரிப்பதற்காக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்தும், அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, வழங்கப்படவுள்ள விடயங்கள் குறித்தும் தெளிவு படுத்தப்பட்டிருந்தன.
இச் செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் , முஸ்லிம் , சிங்கள மூவின ஊடகவியலாளர்களும் பங்கு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செயலமர்வில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும, திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில நுவான் அத்துகோரல, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யஹம்பத், மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன பாண்டிகோரல, முன்னாள் கிழக்கு மாகாண சபையின் அமைச்சர் ஆரியவதி கலப்பதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.