நாடளாவிய ரீதியில் இன்றும் திடீரென மின் தடை ஏற்படும்!

g

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் அவ்வப்போது மின் விநியோகத் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைக்க முடியாத காரணத்தால், இடைக்கிடையே நாடளாவிய ரீதியில் இன்று(07) மின்சார விநியோகத்தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு நாட்டின் சில பாகங்களில் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டது.

இந்த நிலையில், செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைப்பதற்கான பணிகள் நேற்றிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் செயலிழந்துள்ள மின்பிறப்பாக்கியை சீரமைக்க காலதாமதம் ஏற்படுமென்பதால் இன்றும் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *