
யாழ்ப்பாண கடல் பரப்புகளில் இந்திய மீன்வர்களின் வருகையை தடுத்து நிறுத்துமாறு கோரி சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் மற்றும் மாதகல் கடல் தொழிலாளர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது வீதி மறியல் போராட்டத்திலும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


