
கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அண்மையிலுள்ள வீடொன்றின் கூரைக்குள்ளிருந்து நேற்று கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது
மழை ஒழுக்குக் காணப்படுவதால், வீட்டு சீற்றை மாற்றும் போது, கூரைக்குள் கைக்குண்டு காணப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இது பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் அங்கு சென்று அதை மீட்டனர்.
2016 ஆம் ஆண்டிலேயே அந்த வீட்டை குடியிருப்பாளர்கள் வாங்கியுள்ளனர். போர்க் காலத்தில் இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் அந்த வீட்டில் தங்கியிருந்தனர் என்றும் கூறப்படுகிறது.