
மூதூரில் கருவுற்ற மாடொன்று இறைச்சிக்காக அறுக்கப்பட்டுள்ளது.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷாபி நகர் பகுதியில் உள்ள பேய்குடா பகுதியில் வைத்து கருவுற்ற நிலையில் காணப்பட்ட பசு மாடொன்றை திருடிச்சென்று இனந்தெரியாத நபர்கள் இறைச்சிக்காக அறுத்துள்ள சம்பவம் நேற்று முன்தினம் இரவு மூதூரில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து மூதூர் பிரதேசத்தில் இறைச்சிக்காக மாடறுப்பதை மூதூர் பிரதேச சபை நேற்று (06) ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும்வரை தற்காழிகமாக இடை நிறுத்தியுள்ளது.
குறித்த மாட்டின் உரிமையாளர் மூதூர் பொலிஸில் இதுவிடயமாக முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
எனினிம் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையென்பதோடு சந்தேக நபர்களைத்தேடி மூதூர் பொலிஸார் வளைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


