
விசா இன்றி இலங்கையில் இருந்த வெளிநாட்டு இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டு 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை தெற்கு பொலிசார் சந்தேக நபர்களை கைது செய்து களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
இவர்கள் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 மற்றும் 23 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.