16 முதல் 19 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி எப்போது? முக்கிய தகவல் வெளியானது!

<!–

16 முதல் 19 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி எப்போது? முக்கிய தகவல் வெளியானது! – Athavan News

இலங்கையில் 16 முதல் 19 வயதிற்கு இடைப்பட்டவர்கள் தடுப்பூசியின் முதல் டோஸினைப் பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்ததன் பின்னர் இரண்டாவது தடுப்பூசியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொழிற்நுட்ப சேவைகள் பணிப்பாளரும் கொரோனா ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் அன்வர் ஹம்தானி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று(வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply