நாட்டின் வளங்களை விற்கும் கோட்டா அரசு! – சஜித் குற்றச்சாட்டு

நாட்டு வளங்களைப் பாதுகாப்போம் என மார்தட்டி ஆட்சிக்கு வந்த கோட்டாபய அரசு, தற்போது நாட்டு வளங்களை விற்பனை செய்துவருகின்றது.

  • இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று குற்றஞ்சாட்டினார்.

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பான ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டு வளங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது, விற்பனை செய்யப்பட்டுள்ள வளங்கள்கூட மீளப்பெறப்படும் என ஆட்சியாளர்கள் சூளுரைத்தனர்.

தற்போது அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளது. தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எமது வருங்கால சந்ததியினருக்கு ஒரு அங்குலமேனும் மிகுதி இருக்குமா எனத் தெரியவில்லை – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *