
வெளிநாடுகளில் இருந்துவரும் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத இலங்கையர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை விமானப்படை ஆரம்பித்துள்ளது.
அதன்படி வாரத்தின் 24 மணித்தியாலமும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்படி தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.