லண்டன் மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை!

லண்டனில் மருத்துவமனைகளில் சுமார் 200 இராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக அங்குள்ள மருத்துவமனைகளில் ஊழியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் தாதியர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையிலேயே அதனை சிறப்பான வகையில் கையாளும் வகையில் சுமார் 200 இராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, லண்டனில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *