பாணுக்கும் இனி ‘கியூ’!

கோதுமை மா பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாள்களில் பாண் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்ற நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோதுமை மா தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்காவிடின், பொதுமக்கள் ஓர் இறாத்தல் பாணைப் பெற்றுக் கொள்வதற்குக் கூட வரிசையில் நிற்க வேண்டியநிலை ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *