ரணிலின் உரை மீதான விவாதம் நாளை – ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை மீதான விவாதம் நாளை தொடக்கம் இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று சம்பிரதாயப்பூர்வ நிகழ்வில் கலந்துகொள்ளாத ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவாதத்திலும் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் நாளை மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

Leave a Reply