இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படத்துக்கு குவியும் பாராட்டுக்கள்!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படத்துக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருவதாக ‘சினம் கொள்’ பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட சினம் கொள் திரைப்படம் தற்போது ஒ.ரி.ரி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதை இலங்கை மக்கள் கட்டணம் இன்றி பார்வையிட முடியும். படத்துக்கான ஆரம்ப வேலைகள் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும், கொரோனா காரணமாக வெளிவர முடியாத நிலை காணப்பட்டு, தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை திரையரங்குகளில் விரைவில் இது வெளியிடப்படும். இந்த படத்துக்கு தென் இந்திய சினிமான பிரபலங்களான, நடிகர் நாசர், சத்தியராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த படம் இலங்கை சினிமா துறைக்கு ஒரு மயில் கல்லாக அமையும். – என தெரிவித்துள்ளனர்.

சிங்கள மக்கள் மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும்! வடிவேல் சுரேஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *