
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை ஆளுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் என நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் எமது அணி கடுமையான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி உட்பட நாடு தற்போது பல சவால்களை எதிர்கொள்கிறது. பிரச்சினையை தீர்ப்பதற்கான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.
எனினும், நெருக்கடியை சமாளிக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு வேலைத்திட்டம் இருக்கின்றது.
சவால்களை வெற்றிகொள்வதற்கான வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி வகுத்துள்ளது.
உள்ளுராட்சி மன்றத்தேர்தல் நடத்தப்பட்டால் அதன் விளைவுகளை அரசாங்கம் அறிந்திருப்பதால் தேர்தலை எதிர்கொள்ள பயந்து தேர்தலை ஒத்திவைக்கின்றது.
தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிரானது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து தற்போதைய நிர்வாகத்தின் தலைவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளனர்.
விசாரணைகளின் மூலம் தெரியவந்த தகவல்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
தாக்குதலைத் தடுக்கத் தவறியவர்கள் மீதும், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதியை நிலைநாட்ட வேண்டும் என அனைத்துத் தரப்புகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.