
சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளர் அந்த பதவியிலிருந்து நீக்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தமின் தலைவர் சௌமிய குமாரவடு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் இது வரையில் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் புதிய பொதுமுகாமையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சுகயீன விடுமுறையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளர் பதவிக்கு கடந்த 14ஆம் திகதி புதிய நபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.