சீனாவுக்கான விமான சேவை தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அறிவிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்த நிலையில், சீனாவுக்கான வணிக விமானச் சேவைகளை ஏப்ரல் 2023 முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவில் ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் குவாங்சூ ஆகிய இடங்களுக்கு விமான சேவைகள் மீண்டும ஆரம்பிக்கப்படவுள்ளது.

வார நாட்களில் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொழும்பில் இருந்து ஷாங்காய்க்கு விமானங்கள் புறப்படும் மற்றும் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் முறையே ஷங்காயிலிருந்து கொழும்புக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து பெய்ஜிங்கிற்கான விமான சேவைகள் ஏப்ரல் 3இல் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெய்ஜிங் நோக்கி புறப்படவுள்ளது. கொழும்பு திரும்பும் விமானங்கள் குறித்த தினத்திற்கு மறுநாள் இயக்கப்படவுள்ளன.

ஸ்ரீலங்கன் தற்போது கொழும்பு மற்றும் குவாங்சூ இடையே வாராந்திர விமானத்தை இயக்குகிற நிலையில், இரண்டாவது விமான சேவையை மார்ச் 4 அன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, வாரத்தின் ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கொழும்பிலிருந்து குவாங்சோவுக்கான விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் குவாங்சோவிலிருந்து கொழும்புக்குத் திரும்பும் விமானங்கள் ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளன.

Leave a Reply