மோட்டார் சைக்கிளுடன் வேன் மோதி கோர விபத்து – தந்தையும் மகளும் பலி!

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை ஜம்புகஹபிட்டிய வீதியில் பயணித்த தந்தையும் மகளும் வேன் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பொல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரும் அவரது 14 வயது மகளும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை வத்தளை, ஹெந்தல – அலகந்த வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 23 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply