உடனடியாக நிதி வழங்க ஜனாதிபதி பணிப்புரை! SamugamMedia

அரசாங்கத்தின் சில அத்தியாவசிய செலவினங்களுக்கு நிதியை வழங்குவதற்கு அமைச்சரவை இன்று இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி,  பெரும்  போகத்தில்  நெல் கொள்வனவு செய்வதற்கும்  மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம்  அரிசி வழங்கவும் தேவையான  நிதியை வழங்க  அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Leave a Reply