பளை மருத்துவமனை பொறுப்பதிகாரியாக மருத்துவர் சிவரூபன் பொறுப்பேற்பு!SamugamMedia

பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றினால் அன்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட மருத்துவர் சிவரூபன் இன்று பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக மீண்டும் கடமையேற்கவுள்ளார்.

மருத்துவர் சிவரூபன் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் பொலிஸாரால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு அண்மையில் நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்தே மருத்துவர் பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக இன்று பொறுப்பேற்கவுள்ளார்.

Leave a Reply