காரைதீவில் சோகம்: இளம் தாய் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!SamugamMedia

காரைதீவு 09 ஆம் பிரிவில் கண்ணகி கிராமத்தை சேர்ந்த 29 வயது இளம் தாய் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து உள்ளார்.

இரு பிள்ளைகளின் தாயான கே. கமலரூபிணி என்பவரே கணவனுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அறைக்குள் சென்று சேலையை பயன்படுத்தி தூக்கிட்டு உள்ளார்.
உறவினர்கள், அயலவர்கள் 8.00 மணி அளவில் மீட்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் இறந்து விட்டார் என்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. உடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பிண அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
சம்மாந்துறை நீதிவானின் அறிவுறுத்தலுக்கு அமைய சாய்ந்தமருது பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹீர் மறுநாள் மரண விசாரணை மேற்கொண்டார்.
காரைதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் சகிதம் இவர் சம்பவ வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். கமலரூபிணியின் அம்மா, அயல் வீட்டுக்காரர் ஆகியோரின் வாக்குமூலங்களை பதிவு செய்தார்.
இவருடைய அறிவுறுத்தலுக்கு அமைய சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் உடல் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள், உடல் கூற்று பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் பிரகாரம் தூக்கில் தொங்கியதால் கழுத்து இறுகி ஏற்பட்ட மரணம் என்று மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கி உடலத்தை  உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *