யாழில் மேலும் இரண்டு பாடசாலைகளுக்கு பேருந்து: உறுதிமொழி வழங்கிய சஜித்!SamugamMedia

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்கள் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நிலையில் யாழில் நடைபெறுகின்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அந்தவகையில் ஊர்காவற்துறை மற்றும் வட்டுக்கோட்டை தொகுதியின் அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் ஏற்பாட்டில், மூளாய் வதிரன்புலோ பிரசாத் மண்டபத்தில் நேற்றையதினம் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
இதன்போது வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மற்றும் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் தமது பாடசாலைகளுக்கு பேருந்து தேவை என கடிதம் கோரிக்கை முன்வைத்தனர். இது குறித்து ஆராய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் குறித்த இரண்டு பாடசாலைகளுக்கும் பேருந்துகளை வழங்குவதாக உறுதியளித்தார்.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கும் பேருந்து வழங்குவதாக அவர் நேற்றையதினம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply