முல்லைத்தீவு – பாண்டியன் குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி….!

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்து மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நெல் வெட்டும் இயந்திரம் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அனுராதபுரத்தைச் சேர்ந்த ரவீந்திர நிக்கசீல சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், செல்வபுரம் பாண்டியன் குளத்தைச் சேர்ந்த விமல் விக்னேஷ் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ஏற்கனவே மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பாண்டியன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்னநாயக்க மேற்கொண்டு வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *