ரயில் உதிரிப்பாகங்கள் தட்டுப்பாடு! தொடர்ந்தும் தடம் புரள்வுகள் – சேவைகளில் தாமதம் SamugamMedia

புகையிரத திணைக்களத்திற்கு தேவையான உதிரிப்பாகங்கள் இல்லாத காரணத்தினால் ரயில் சேவைகளில் தாமதம் தொடர்வதாக ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரயில்வே பொது மேலாளர் தெரிவிக்கையில்;

ரயில் தண்டவாளங்கள் பராமரிக்கப்படாததால், ரயில்கள் அடிக்கடி தடம் புரண்டு வருகின்றன. 

இதன் காரணமாக ரயில் சேவையில் தாமதங்கள் ஏற்படுவதாகவும், ரயில் மின் பெட்டிகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளால் ரயில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகள் மற்றும் கட்டிடங்கள் தனியார் துறையுடன் இணைந்து திணைக்களத்திற்கு வருமானம் ஈட்டும் வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

காட்டு யானைகள் புகையிரதத்தில் உயிரிழப்பது தொடர்பாக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்டு யானைகள் உயிரிழப்பை குறைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். என தெரிவித்திருந்தார்.

Leave a Reply