மசாஜ் நிலையம் என இயங்கிய விபசார விடுதி – ஐந்து பெண்கள் சிக்கினர்! SamugamMedia

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி வீதியில் இந்த சம்பவம் நேற்றையதினம் (24) இடம்பெற்றுள்ளது. கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் விபசார விடுதியின் முகாமையாளர் உட்பட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

காலியில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரினால் இந்த விபசார விடுதி நடத்தப்பட்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

ஹெனேகம வில்லிம்புல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண், ஹோமாகம, பிடிபன பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண், தெஹியத்தகண்டியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் மற்றும் தும்மோதர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் என நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply