'மே 9' வன்முறையில் சேதமடைந்த இ.போ.சவின் 18 பஸ்கள்! SamugamMedia

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 18 பஸ்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. இதனால் 7 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வுத் திணைக்களத்தின் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 மே 9 ஆம் திகதி கோட்டா கோ ஹோம், மைனா கோ ஹோம் மீது மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியத்தைத் தொடர்ந்து நாட்டில் வன்முறை வெடித்தது.

அந்த வன்முறையின் போது எம்.பிக்களின் வீடுகள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் எரிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டார். அந்த வன்முறையின் போதே இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 18 பஸ்களுக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply