தமிழக மீனவர்களின் 4 படகுகள் நிபந்தனையுடன் விடுவிப்பு! 8 படகுகள் அரசுடமை SamugamMedia

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின்  12 படகுகளில் 4 படகுகளிற்கு 476 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதோடு 8 படகுகள் அரச உடமையாக்கப்பட்டது.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 12 படகுகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழங்கப்பட்டது.

இதன்போது 4 படகுகளிற்கு மொத்தமாக 476 ஆயிரம் ரூபா தண்டப்பணம் 14 நாள்களிற்குள் செலுத்தின்  மீண்டும் உரிமையாளர்களிடம் விடுவிக்கலாம் எனவும் 8 படகுகள் அரசுடமை ஆக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் கஜயநிதிபாலன் உத்தரவிட்டார்.

Leave a Reply