கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் நிலையில் நீர் தேக்க க்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் நிலையில் இப் பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்க க்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 48 அடி குறைந்து 88 நீர் மட்டும் உள்ளது என நீர் மின் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.அதே போல் காசல்ரீ மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
மத்திய மலைநாட்டில் பல பகுதிகளில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள அனைத்து ஊற்றுகள் வற்றிய நிலையில் உள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
எது எப்படியாயினும் தொடர்ந்து மத்திய மலைநாட்டில் வெப்பம் நிலவும் பட்சத்தில் முற்றாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் நீர் மின் உற்பத்தி பாதிக்கும் ஏற்படும் அபாயத்தை மக்கள் சந்திக்க நேரிடும்.