சர்வதேச நாணய நிதியத்தின், நீடிக்கப்பட்ட நிதி வசதியின், முதல் தவணை கொடுப்பனவு கிடைத்துள்ளமை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்து உரையாற்றும் போது சில உறுப்பினர்கள் குழப்பங்களை விளைவித்திருந்தனர்.
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உரையாற்றும் போது சில உறுப்பினர்கள் கோசமிட்டு அவரின் உரையை குழப்ப முற்பட்டிருந்தனர்.
இவ்வாறு கோசமிட்டு குழப்பினால் கப்புடு காக்காவை அழைக்க வேண்டியிருக்கும் என்று விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்திருந்தார்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் போது பசில் ராஜபக்சவிற்கு ஏழு மூளை கொண்டவர் என விமர்சிக்கப்பட்டு கப்புடு காக்கா என்ற பாடல் பிரபல்யம் அடைந்திருந்தது.
இதனை இன்று சபையில் பசிலை அழைக்கவேண்டியிருக்கும் என்ற கருத்தை மறைமுகமாக கப்புடு காக்காவை அழைக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார்.
அத்துடன் லாபம் பெரும் நிறுவனங்களான ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் ஆகியவற்றின் பங்குகளை விற்பனை செய்வதன் ஊடாக அவற்றை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெற்றுக் கொண்டால், இலங்கை ரூபாய் அமெரிக்க டொலர்களாக மாற்றப்பட்டு நாட்டின் வருமானம் வெளியேறுவதற்கான சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இதற்கான சரியான தீர்வை சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டு தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் அறிவித்தார்.