மாவடிப்பள்ளி ஆற்றின் ஓரத்தில் முதலை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழப்பு! SamugamMedia

மாவடிப்பள்ளி ஆற்றின் ஓரத்தில் பொன்னாங்கன்னி இலைக்கறி பறித்துக் கொண்டிருந்த ஒருவர் முதளை தாக்குதலுக்கு இலக்காகி உயிர் இழந்துள்ளார்.

சம்மாந்துறை கோரக் கோயில் பிரதேசத்தை சேர்ந்த  04 பிள்ளைகளின் தந்தையான இராசப்பு சௌந்தராஜன் (61வயது) என்பவரே முதளைத் தாக்குதலில் உயிர் இழந்துள்ளதாக உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த மரணம் குறித்து கல்முனை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.ஜவாஹிர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

இவ்வாறு மரணித்த சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் முதளைத் தாக்குதலில் உயிர் இழந்தவருக்கு நஸ்டஈடு கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *