இலங்கை குமரித் தமிழ் பணி மன்றத்தின் உலக தாய்மொழி தின நிகழ்வு!SamugamMedia

இலங்கை குமரித் தமிழ் பணி மன்றத்தின் உலக தாய்மொழி தின நிகழ்வும் ஆறுமுக நாவலர் மற்றும் மருத்துவர் சாமுவேல் பீச்க் கிறீன் ஆகியோரின் 200வது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வும் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இலங்கை குமரித்தமிழ் பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் தகைசார்​ வாழ்நாள்​ ​ பேராசிரியர் அ.சண்முகதாஸ் ,கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முதல்வர் ச.லலீசன் ,உள்ளிட்ட கலைஞர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை குமரித்தமிழ் மன்றத்தின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு மலரும் வெளியிடப்பட்டது.மூத்த கலைஞர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

Leave a Reply